கடலூர் மாவட்டம் கச்சி மயிலூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்-சூர்யா தம்பதிக்கு ராஜேஷ் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.
விஸ்வநாதன் கூலித் தொழிலாளி. வழக்கமாக சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ராஜேஷ் கடந்த இரண்டாண்டுகளாக மூக்கு வலிப்பதாக பெற்றோர்களிடம் தெரிவித் துள்ளார். மருத்துவர்கள் மருந்து, மாத்திரை கொடுத்தும் மூக்குவலி சரியாகவில்லை. மழைக்காலத்தில் வலி அதிகரித்து, மூச்சு விடவே சிரமப் பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ராஜேசுடன் படிக்கும் சக மாணவர்கள் அவருடன் விளையாடுவதையும், அருகில் அமர் வதையும் தவிர்த்துள்ளனர். ஆசிரியர்கள் விசாரித்தபோது ராஜேஷ் மீது நாற்றமடிப்பதாகவும் குறிப்பாக மூக்கிலிருந்து அடிக்கடி சீழ் வடிவதாகவும் மாணவர்கள் கூறியுள்ள னர். இதையடுத்து ஆசிரியர்கள் மாணவரின் பெற்றோரை அழைத்துப் பேசியுள்ளனர்.
இதையடுத்து ராஜேஷை பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பெற்றோரிடம் விசா ரித்தபோது, குச்சியால் தனது மூக்கைக் குத்தியுள்ளான் எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து ராஜேஷை பரிசோதித்த கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உதவிப் பேராசிரியர் வாசவி, உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் ராஜேஷின் மூக்குப் பகுதியை எண்டோஸ்கோப்பி மூலம் ஆய்வு செய்தபோது மூக்கின் உள்பகுதியில் ஏதோ ஒரு பொருள் கருப்பாக இருந்தது தெரிய வந்தது.
சிறுவனிடம் மருத்துவர்கள் கேட்டதற்கு “தாம் ஒருமுறை பொம் மையில் இருந்த பேட்டரியை வெளியே எடுத்து விளையாடியதாகவும். அப்போது அதை எப்படி மூக்கில் திணித்தேன் என்று நினைவில்லை. ஆனால், அதை மூக்கில் இருந்து வெளியே எடுக்க குச்சியை வைத்துக் குத்தியது நினைவில் உள்ளது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் அந்தப் பொருளை அகற்றிய போதுதான் தெரியவந்தது அது பொம்மைகளில் பயன்படுத்தப்படும் மிகச் சிறிய அளவிலான மூன்று பேட்டரி கள் என்பது. அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து ராஜேஷ் உரிய கவனிப் பிற்குப் பிறகு ஜூலை 3-ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளாக மற்ற சிறுவர்களுடன் ஒன்றாக விளையாட முடியாமல், மூக்கு வலியால் துடித்துக் கொண்டிருந்த ராஜேஷின் கண்களில் இனி விளையாடித் தீர்க்க வேண்டும் என்ற ஆவல் நிரம்பி வழிந்தது அவனது முகத்தில் தெரிந்த உற்சாகத்தின் வழியே தெரிந்தது.
இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் செந்தில்ராஜா கூறுகையில், “ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள் மத்தியில் சிறிய பொருட்களை விழுங்கும் நிகழ்வு அதிகம் நடக்கும். குறிப்பாக, “சட்டை களில் இருக்கும் பொத்தான்கள், ஊசி, பொம்மைகளில் இருக்கும் சிறிய பேட்டரிகள், கழுத்தில் அணிந்துள்ள மணிகள், கற்கள் போன்றவற்றை குழந் தைகள் அதிகமாக விழுங்கிவிடுவார் கள். பெற்றோர்கள் மிகக் கவனமாக குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டியது அவசியம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில், “ஐந்து வயது வரை குழந்தைகளைக் கண் காணிப்பில் வைத்திருப்பது அவசியம். ஏனெனில் குழந்தைகள் விளை யாட்டுப் பொருட்களை வைத்து விளை யாடுவதில் காட்டும் ஆர்வத்தைவிட, அவற்றைப் உடைத்து அல்லது பிரித்து ஆராய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
எலக்ட்ரானிக் வகை பொம்மை களை இந்த வயது குழந்தைகளிடம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது,” என்றும் அறிவுறுத்தினார்
“காதிலோ மூக்கிலோ குழந்தை கள் சிறு பொருட்களைப் போட்டுவிட் டால், அடிக்கடி வலி ஏற்பட்டு அழு வார்கள். அவர்களின் வலியை அலட்சி யப்படுத்தாமல் அவர்களை தீவிரப் பரி சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
மூக்கில் ஏதாவது ஒரு பொருளை திணித்தால், சளித்தொல்லை, மூச்சுத் திணறல் ஏற்படும். அதன்மூலம் அதை அறியலாம். வாயில் எதையாவது போட்டுவிட்டால் பெரிய மூச்சுக் குழாய் அல்லது சிறிய மூச்சுக் குழாய் பகுதிக்குச் சென்றுவிடும்.
இதனால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும், அடிக்கடி இருமல், சளி ஏற்பட்டு காய்ச்சலால் அவதிப்படுவார்கள்.” இத்தகைய அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை உடனே குழந்தை கள் நல மருத்துவரிடம் கொண்டு சென்று சிடி ஸ்கேன் போன்றவற்றின் மூலம் ஆய்வு செய்து சிகிச்சை மேற் கொள்ளலாம் என்றார்.